தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறப்படும் கூற்று தவறானது.

ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது.

அடுத்த 10 வருடங்களில் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக்கப்படும்.

வேளாண் இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரத்திற்கான மானியத்திற்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில் கொரோனா தொடர்பான செலவுகளுக்கு ரூ.241.40 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திறன் உள்ளது.

தினசரி 8 லட்சம் பேருக்கு செலுத்தும் திறன் இருந்தும் 2.40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வருகின்றன.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரூ.257 கோடியில் துவங்கப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு.

இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும்.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.69 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு நகர்புற சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.116 கோடி ஒதுக்கீடு.

கலைஞர் முன்மொழிந்த சித்தா பல்கலைக்கழகத்தை உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

பழனி முருகன் கோயில் மூலம் புதிய சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.

தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி ஒதுக்கீடு.

15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.60 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள்.